படப்பிடிப்பின் போது விபத்து... பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி..!!

 

2016-ம் ஆண்டு கன்னடம் திரையுலகில் வெற்றித்திரைப்படமான ‘கிரீக் பார்ட்டி’ படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னடம் திரையுலகில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இப்படம் 2018-ம் ஆண்டு தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு வெளிவந்த ‘வாட்ச்மேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டு ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து ‘பப்பி’ படத்திலும் நடித்துள்ளார்.

சில காலமாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த சம்யுக்தா தற்போது ‘கிரீம்’ படத்தில் நடித்து வருகிறார். கந்தீரவா ஸ்டுடியோவில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்றபோது சம்யுக்தாவுக்குத் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பில் டூப் போட்டு பயன்படுத்துமாறு சொன்னாலும், சம்மதிக்காத சம்யுக்தா, ஆக்‌ஷன் காட்சிகளை தானே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு ஐக்கிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஃபைட் மாஸ்டர் பிரபு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடனம் அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சம்யுக்தா மருத்துவமனையில் இருப்பதால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.