அரசியல் கதை களத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா..?

 
பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த வரிசையில் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமாருடன் அடுத்த படத்தில் நடிப்பதற்கு இணைந்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த படம் அரசியல் ரீதியான கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் 2024ஆம் ஆண்டு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.