முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - நடிகர் வரலட்சுமி சரத்குமார் 

 

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக ஒரு வீடியோ பதிவின் மூலம் அவர் அறிவித்துள்ளார். 

அதில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரையும் முககவசம் அணியும்படி நடிகர்கள் வலியுறுத்த வேண்டும் ஏனென்றால் நடிகர்கள் ஆகிய நாம் படப்பிடிப்பின் போது முககவசம் அணிய முடியாது. சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள், முக கவசம் அணியுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார்.