சோழ நாட்டு புலியாக உறுமும் நடிகர் விக்ரம்…வெளியான டப்பிங் வீடியோ..!!

 

இயக்குனர் மணிரத்னம் தனது நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கியுள்ளார். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகனும் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 

சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்த படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே டப்பிங் பேசியுள்ளார். ஒவ்வொரு மொழியிலும் மிகவும் நேர்த்தியாக உச்சரிப்புகளை விக்ரம் வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் சீற்றமான ஒரு வசனத்தை கர்ஜிக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. சோழ நாட்டு புலியாக அதில் உறுமுகிறார்.