தனுஷின் 50வது படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தை முடித்துள்ள அவர், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற உள்ளது.
இந்த படத்தையடுத்து தனது 50வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார். 'ராயன்' என்று தலைப்பில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த படத்திற்கான பணிகளை தனுஷ் செய்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது. தனுஷின் 50வது படமாக உருவாகும் இந்த படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டலான உருவாகவிருக்கிற இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.