பிரபல மலையாள நடிகர் நெடும்பராம் கோபி காலமானார்..!! 

 

2004-ம் ஆண்டு பிளஸ்சி இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘காழ்ச்சா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெடும்பராம் கோபி. இந்தப் படத்தில் மம்மூட்டிக்குத் தந்தையாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து காவ்யா மாதவனின் சீலாபதி, சுரேஷ் கோபியின் அஸ்வாரூடன், ஆனச்சந்தம், தனியே, ஆனந்தபைரவி, உற்சாககம்மிட்டி என 15 திரைப்படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக அலிஃப் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவில்லாவைச் சேர்ந்த நெடும்பராம் கோபி, கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில் நேற்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த கோபியின் மனைவி கமலாம்மா ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. இவர்களுக்கு சுனில் ஜி.நாத் என்ற மகனும் சுனிதா, சுபிதா என்ற மகள்களும் உள்ளனர்.