ஒடிடியில் வெளியாகிறதா பார்த்திபனின் இரவின் நிழல்..அவரே சொன்ன பதில்..!! 

 

இயக்குனர் பார்த்திபன் தனது முதல் படமான 'புதியபாதை'  முதல் 'ஒத்த செருப்பு' வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி, அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார்.  ஒத்த செருப்பு 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருது உட்பட  பல உலக விருதுகளை பெற்றது. 

தனது முத்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன், தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பியிருக்கிறார். உலகின் முதல் NON - LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக வெளியிட்டார். படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. 

இந்நிலையில் இப்படம் எப்போது ஒடிடியில் வரும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர்..    

இது குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்."காலை வணக்கம்!
அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! 
நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!