லாஸ்லியா ஓபன் டாக்..!! கவினுடன் பிரிந்ததுக்கு இதுதான் காரணம்..!!

 

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் பிரபலமான லாஸ்லியா மற்றும் கவின். இவர்கள் காதலை காண தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் அவரவர் வேலைகளை மட்டும் பார்த்து வருகின்றனர்.

‘பிக் பாஸ் 3’ இல் இருந்து பணம் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வெளியேறும் போது கவின், லாஸ்லியாவுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார், ஆனால் இவர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

லாஸ்லியா சமீபத்தில் ஒரு நேர்காணலில் முதன்முறையாக கவினுடனான தனது பிரிந்ததற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், எல்லோரையும் போலவே கவினுடன் மற்றவர்களுடன் பழகுவது போலவே பழகியதாகும் . வீட்டிற்குள் இருந்ததை காட்டிலும் வெளியே சென்றதும் இருவருக்கும் இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டது மற்றும் சமூக அழுத்தத்தின் காரணமாக அவர்கள் தனித்தனியாக செல்ல முடிவு செய்டதாக தெரிவித்தார்