ஓடிடியில் வெளியானது பொன்னியின் செல்வன்... ஆனால் ஒரு கண்டிஷன் 

 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்-1'. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -1' ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தை தற்போது வாடகை முறையில் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.ரூபாய் 199 செலுத்தி இப்படத்தை காணலாம்