கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை..!!

 

சீரியல் நடிகைகளான நக்ஷத்திரா, சைத்ரா, ஷபானா, ரேஷ்மா இவர்கள் அனைவரும் நல்ல தோழிகளாக இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான். இந்த அணியில் முதலில் சைத்ரா ரெட்டிக்கு திருமணம் முடிந்தது. அதற்கு பிறகு சபானா மற்றும் ரேஷ்மாவுக்கு திருமணம் முடிந்த நிலையில் கடந்த  வருடம் நக்ஷத்திராவிற்கும் திருமணம் முடிந்தது. மிக எளிமையாக நக்சத்திராவின் திருமணம் நடந்தது. இருந்த போதிலும் இவரது திருமணம் பேசு பொருளாக மாறியது அதற்கு காரணம் சீரியல் நடிகை ஸ்ரீநிதி வெளியிட்ட கருத்துதான். ஆனால் அதற்கும், திருமணத்திற்கு பிறகு பல பேட்டிகள் மூலமாக விளக்கம் கொடுத்தார் நக்ஷத்திரா.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் கூட வள்ளி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நக்சத்திரா அந்த சீரியல் முடிந்த  நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது, இந்த நிலையில் “ஆம் நான் கர்பமாகதான் இருக்கிறேன்” என தெரிவித்து கியீட்டான பேபி பம்ப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.