கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு..!! முதல்ல விஜய் பட டைட்டில்...இப்போ விஜய் இயக்கும் வாய்ப்பா ?

 

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன்.முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார் பிரதீப். அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.  ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்துள்ள லவ் டுடே வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அத்துடன் தியேட்டர் உரிமையாளர்கள் லவ் டுடே படத்திற்கு அதிகப்படியான திரையரங்குகளை ஒதுக்கி உள்ளனர்.

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், நான் நடிகர் விஜய் சாரிடம் கதை சொல்லி இருக்கிறேன். தற்போது நான் அதைப்பற்றி பேசக்கூடாது, ஆனால் கூடிய விரைவில் இது தொடர்பாக தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.இதன் மூலம் விரைவில் பிரதீப் ரங்கநாதன் தளபதி விஜயை இயக்குவார் என் எதிர்பார்க்கலாம்.