தனக்கு வந்த நோயை நினைத்து அழுத சமந்தா…!!
Nov 8, 2022, 15:50 IST
நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’. வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பான் இந்தியா முறையில் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது நடிகை சமந்தா யசோதா படத்துக்காக கொடுத்த பேட்டி ஒன்றில் உடல் நிலை குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு மனம் நொந்து போய் அழுது , வாழ்க்கையில் சில நாட்கள் உங்களை உயர்த்தும் ,ஒரு சில நாட்கள் மோசமடையும் . நாட்கள் செல்ல செல்ல என்னை நான் உத்வேகப்படுத்தி , நான் அவ்வளவு சீக்கிரம் மடிந்து போகமாட்டேன் என அவர் சொல்லும் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது .