நடிகர் தனுஷ் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை..!! 

 

‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ ஆகிய படங்களுக்கு பிறகு ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார்  ‘கேப்டன் மில்லர்’.இந்த படத்தை ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். தனுஷின் முதல் பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகிறது. இந்நிலையில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தென்காசியில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 120 நாட்கள் நடைபெற உள்ளது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு ரசிகர்களை கவரவே இந்த படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கேப்டன் மில்லர் படத்தில் ஜான் கொக்கன் வில்லனாக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 மேலும் நடிகர் தனுஷுக்கு மொத்தம் மூன்று தோற்றங்கள் இருக்கும் என்று அருண் மாதேஸ்வரன் முன்னதாக அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் .

அவர் மேலும் கூறுகையில், பிரமாண்டமான ஒரு ஆக்‌ஷன் படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் உருவாக்கிய ஒரு சுவாரஸ்யமான கற்பனைக் கதாபாத்திரம் இது. நான் எழுதத் தொடங்கும் போது யாரையும் மனதில் கொள்ளாத நிலையில், இடையிடையே தனுஷ் அப்படித்தான் இருப்பார் என்று உணர ஆரம்பித்தேன். இந்த பாத்திரத்திற்கு சரியானவர். அவர் எப்படி ஒரு பெரிய நட்சத்திரமாகவும் ஒரு அற்புதமான நடிகராகவும் இருக்க முடியும் என்பதற்காக அவரை நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். இந்த கதாபாத்திரத்தின் 15 ஆண்டுகால வாழ்க்கையில் கதை விரிவடைகிறது, எனவே அவர் ஒரு நபரின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களை படம்பிடிப்பார் என்று எனக்குத் தெரியும். மிகவும் நன்றாக இருக்கிறது, அங்கு நடவடிக்கை மற்றும் உணர்ச்சிகளின் வரம்பு உள்ளது, மேலும் அவர் அதை சிறந்த முறையில் இழுப்பார் என்று நான் உணர்ந்தேன்,” என்று அவர் முன்னதாக தெரிவித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தினார் .இம்மாத இறுதியில் படம் திரைக்கு வரும் என தெரிகிறது. .