பிளாக்பஸ்டர் படமான தனி ஒருவன் படத்தை வேண்டாம் என நிராகரித்த நடிகர்..!

 

தனி ஒருவன் என்ற தலைப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.இது அணைத்து புது முக இயக்குனர்களையும் கொண்டாட வைத்தது.

ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்களுக்காக அதை பற்றி அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது…

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனி ஒருவன் கதையை பிரபாஸ் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நினைத்து தான் எழுதியதாகவும் அவர் அப்போது காதல் கதைக்களம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்ததால் தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்ததாகவும் இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார் இது எனக்கு அப்போது கஷ்ட்டத்தை கொடுத்தாலும் அதன்பின் தான் இப்படத்திற்குள் ஜெயம் ரவி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்…அவருக்கு ஒரு நல்ல படமாக அமைந்தது என்பதால் மிகவும் மகிழ்ச்சி என்றார்.