ரசிகர்களிடம் கோபப்பட்ட நடிகை சமந்தா..! ஏன் தெரியுமா ?

 

சமீபத்தில் சமந்தா வளர்த்து வந்த நாய் நாகசைதன்யாவிடம் இருப்பதை பார்த்த சிலர் மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர் அதுவும் பெரிய சர்ச்சையை உருவாக்கியது….அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களுக்கு அறிவு இல்லையா வேலை இல்லாமல் இருக்கிறீர்களா…புத்தகம் படியுங்கள் அறிவு வளரும் என்றார் இதனால் அவர்கள் பிரிவு நீடிப்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்ட ஒரு பதிவு ஆர்வத்தை கிளப்பி உள்ளது. அதில்,கருணை குணத்தை ஒரு திட்டமாக அல்லாமல் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டுதலாக பழக்கப்படுத்தி கொள்பவர்களுக்கு ஹேட்ஸ் ஆப் என ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார்..இது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக யோசித்து வந்தனர்..

இதையடுத்து சமந்தா யாரை மனதில் வைத்து இந்த பதிவை வெளியிட்டார் என்று பலரும் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி பல சண்டைகளை போட்டு வருகின்றனர்…தனது கருத்து மீது வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள சமந்தா ஒரு நல்ல வார்த்தை சொன்னால் புரிந்து கொண்டு அதை அனுசரிக்க முயற்சி செய்ய வேண்டும்…அதை வைத்து விவாதம் செய்பவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என சொல்லியுளளார் நடிகை சமந்தா…