‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியல் மூலம் ரீ- என்ட்ரி ஆகும் நடிகை!

 

விஜய் டிவியில் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. மூத்த மகன் சரவணனுக்குத் திருமண ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார் பாண்டியன். சரவணனுக்கு ஜோடியாக நடிகை சரண்யா சீரியலில் புது என்ட்ரியாக வரவிருக்கிறார்

யார் இந்த சரண்யா ?  

‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற தொடர்களில் நடித்தவர், இடையில் நடிப்புக்குக் குட்டி பிரேக் எடுத்தார். தற்போது  நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பி இருக்கிறார். சரண்யாவின் வரவால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் என்ன மாற்றம் ஏற்படும் எப்படியான திருப்பம் நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்க்ள் ரசிகர்கள்.