ஷங்கர் இயக்கும் படத்தில் ஆலியா பட்- அப்போ கியாரா அத்வானி..?

 

ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா பட், அடுத்ததாக ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஆலியா பட் முதன்முறையாக தென்னிந்திய சினிமா துறையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் மூலம் கால்பதித்துள்ளார். இந்த படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். மிக பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு தெலுங்குப் படத்தில் ஆலியா பட் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் அவர் தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஆர்.ஆர் பட படப்பிடிப்பில் ஆலியா பட்டின் நடிப்பு திறமையை கண்டு ராம்சரண் வியந்து போனதாகவும், அதனால் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் அவரை ராம்சரண் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.