ஆண்ட்ரியா மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார்: பிரபல இயக்குநர் கவலை..!

 

தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு ஆண்ட்ரியா மிகவும் கஷ்டப்பட்டுவிட்டதாக பிரபல இயக்குநர் ஒருவர் நேர்காணலில் தெரிவித்துள்ளது கவனமீர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் மிஷ்கின். இவருடைய இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் பிசாசு. நாகா, பிராயாகா மார்டின், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 6 வருடங்கள் கழித்து இயக்குநர் மிஷ்கின் உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிசாசு 2 படம் குறித்து பேசிய இயக்குநர் மிஷ்கின். முதல் பாகத்திற்கும் இந்த படத்திற்கு சம்மந்தம் இல்லை. இரண்டு படங்களுமே வேறு  வேறு கதை. எனினும், இரண்டு படங்களும் ஒரே பாணியில் உருவானது தான். 

மேலும் பிசாசு 2 படம் பெரியவர்களுக்கான திகில் படம். படம் அச்சுறுத்தும் என்பது உறுதி. நடிகை ஆண்ட்ரியாவின் திரை வாழ்க்கையில் இந்த படம் முக்கியமானதாக அமையும். அவரை மிகவும் கஷ்டப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன் என்று சொல்லலாம் என மிஷ்கின் கூறியுள்ளார்.