பிளாஸ்டிக் போல மாறிய அதுல்யா ரவி- காரணம் இதுதான்..!!
தொடர்ந்து செய்யப்பட்டு வரும் பிளாஸ்டிக் சர்ஜரி காரணமாக நடிகை அதுல்யா ரவியின் முகம் முற்றிலும் மாற்றம் அடைந்து, பொலிவிழந்து காணப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முழுக்க கோயம்புத்தூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட காதல் கண் கட்டுதே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. இவரும் கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்டவர் தான். அந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அதுல்யா ரவியின் கியூட்டான முகமும் புன்சிரிப்பும் தமிழக இளைஞர்களை கவர்ந்தது.
இதனால் முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். எனினும் தொடர்ந்து அவர் சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நாயகியாக நடித்து வருகிறார். இதுவரை அவர் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவர், மீட்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் டீசல் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த புகைப்படத்தில் அதுல்யா ரவி தனது முகத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது தெரியவந்தது.
அவருடைய முந்தைய படத்தில் இருந்த முகத்துக்கும், தற்போதைய முகத்துக்கும் நிறைய மாற்றங்களை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் அதுல்யா ரவியின் கியூட்டான முகம் காணாமல் போய், பிளாஸ்டிக் போல இருக்கிறார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.