கவனமாக இருங்கள்... மகிழ்ச்சியாக இருங்கள்... மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள் : நடிகை ராஷ்மிகா!
ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சேகர் கம்முலா ஆகியோருடன் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தெலுங்கு டிரைலர் வெளியிடப்பட்டது. இயக்குநர் ராஜமௌலி தெலுங்கு டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைனில் அனைத்து மொழிகளிலும் டிரைலர் வெளியானது.
குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகை ராஷ்மிகா பேசியதாவது:-
விமான விபத்துக்கு பிறகு நான் நடுங்கிப் போனேன். எதுவும் உலகில் நிரந்தரம் இல்லை என புரிந்தது. நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன, எதுவரை வாழ்க்கை செல்லும் என தெரியவில்லை. எனவே கவனமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவரிடத்தில் கருணையோடு இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.