பிக்பாஸ் சீசன் 5 வருகை: இரண்டு சீரியல்களின் ஒளிபரப்பு ரத்து..!

 

விரைவில் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளதன் காரணமாக மக்களிடையே வரவேற்பு பெற்று வந்த இரண்டு தொடர்கள் இனி ஒளிபரப்பாகாது என்று தெரியவந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. அதற்கு பிறகு 4-ம் தேதி முதல் பிக்பாஸ் 5 இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. 

இதன்காரணமாக அந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகி வந்த தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செந்தூரப்பூவே ஆகிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. செந்தூரப்பூர்வே தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல் முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது