நடிகை சமந்தாவை மறைமுகமாக விமர்சித்தாரா? வெங்கடேஷின் சர்ச்சை பதிவு..!!

 

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யாவின் தாய்மாமன் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் நடித்து இருந்தார். இன்ஸ்டாகிராமில் இதுவரை அவர் தனது குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டதில்லை. நாகசைதன்யா, சமந்தா விவாகரத்து விஷயம் வெளியான பிறகு காதல், அன்பு, வாழ்க்கை, நம்பிக்கை போன்ற அம்சங்கள் பற்றி தினமும் ஏதோ ஒரு பதிவை வெளியிடுகிறார். புதிதாக அவர் வைத்த ஒரு தத்துவ பதிவு வைரலாகி வருகிறது.

“உன்னை விரும்பியவர்களை எப்போதும் மோசம் செய்யாதே. உன்னை வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிஸியாக இருக்கிறேன் என சொல்லாதே. யார் உங்களை அதிகமாக நம்புகிறார்களோ, அவர்களை எப்போதும் மோசம் செய்யாதே. உன்னை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்பவர்களை மறந்துவிடாதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா விவாகரத்து பற்றி தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டு இருப்பதாக வலைத்தளங்களில் சர்ச்சையாக பேசப்படுகிறது.