இளவரசி சீரியலில் நடித்த நடிகை இப்ப என்ன வேலை செய்யுறாங்கன்னு தெரியுமா?

 

சின்னத்திரையில் கலக்கியவர் நடிகை சந்தோஷி. ரஜினியின் பாபா படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து வீராப்பு, மிலிட்டரி படங்களிலும் நடித்தார். தொடர்ந்து பெரிய திரையில் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரைப் பக்கம் வந்தவர் அரசி, இளவரசி சீரியலிலும் நடித்தார்.

இவர் ஸ்ரீகர் என்னும் நாடக நடிகரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டவர் இப்போது தன் கணவரோடு சேர்ந்து பிளஸ்(plush) என்னும் பொட்டிக் ஷாப் நடத்திவருகிறார். 

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவை இரண்டும் பெண் குழந்தைகள். இப்போது அன்பான கணவர், மூன்று பிள்ளைகள், தன் பெட்டிக் ஷாப் என வாழ்ந்து வருகிறார் சந்தோஷி.