ஹரி - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘யானை’- ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

 

ஹரி - அருண் விஜய்யை கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘யானை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமர்ஷியல் சினிமா இயக்குநர் தன்னுடைய மைத்துனர் அருண் விஜய்யை வைத்து முதன்முறையாக படம் இயக்கி வருகிறார். இதனுடைய ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த படத்துக்கு ‘யானை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, கே.ஜி.எஃப் புகழ் கருடா ராம், ராதிகா, சினேகன், யோகி பாபு, சினேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.