பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் மகன் பார்த்து இருக்கீங்களா ?

 

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். 

பாடகி ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்.

கடந்தாண்டு கருவுற்று இருக்கும் செய்தியை அறிவித்த ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷிலாதித்யா தம்பதிகளுக்கு கடந்த மே 22-ம் தேதி மும்பையில் ஆண் குழந்தை பிறந்தது. அதன்படி ஸ்ரேயா தன்னுடைய மகனுக்கு தேவ்யான் என்று பெயர் சூட்டியுள்ளார். திரையுலகில் ஸ்ரேயா அறிமுகமான போது அவர் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கிய ‘தேவ்தாஸ்’ படத்தில் முதன்முதலாக பாடினார். அவருடைய முதல் பாடலே அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அதன் நினைவாக தன்னுடைய மகனுக்கு தேவ்யான் என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்ரேயா. 

இந்நிலையில் பாடகி ஸ்ரேயா கோஷல், முதல்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.