எனக்கு சினிமாவில் மறுபிறவி... உணர்ச்சிவசப்பட்ட வடிவேலு!
இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பின் போது பிரச்சனை ஏற்பட்டு, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.
பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுமூக முடிவு எட்டப்பட்டு, ரெட் கார்டும் நீக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் வடிவேல் கூறியதாவது,
என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள்.
நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறு பிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன். 2 படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன் என்றார்.