இது யோகாவா ? நெட்டிசன்கள் கிண்டல்..! ஒருவர் மேல் ஒருவர் படுத்து கொண்டு... 
 
​​​​​​​

 

தமிழ்,  தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங் என்பதும் இவர் சமீபத்தில் தான் தனது காதலர் ஜாக்கி பாக்னானு என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது கணவருடன் சேர்ந்து யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக ரகுல் ப்ரீத் சிங் மீது அவரது கணவர் படுத்துக்கொண்டு கொடுத்த யோகா போஸ் புகைப்படத்திற்கு மோசமான கமெண்ட்டுகள் பதிவு செய்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

புதிதாக திருமணமானவர்கள் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு செய்ய வேண்டியதை யோகா என்ற பெயரில் செய்வது அநாகரிமானது என்றும், இதுபோன்று நீங்கள் யோகா செய்வது தவறு இல்லை ஆனால் இதையெல்லாம் புகைப்படமாக எடுத்து பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் நடிகைக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படங்களுக்கு பாசிட்டிவ்வாக ஏராளமான கமெண்ட்கள் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.