பிரமாண்டமாக தயாராகும் படத்தில் இணைந்த ஜோதிகா..! ஹீரோ யார் தெரியுமா..??
 

 

திருமணத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகைகள் வரிசையில் இருக்கும் ஜோதிகா, பிரமாண்டமாக தயாராகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சில ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் அவர் அதிகமாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு தமிழில் மட்டுமே நடித்து வந்த ஜோதிகா, தற்போது முதல்முறையாக தெலுங்கில் நடிக்கிறார். கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் நடிகை ஜோதிகாவும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிரபாஸின் சகோதிரியாக இந்த படத்தில் அவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுதொடர்பாக படக்குழு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.