அரசியை மொத்தமாக ஒழித்து கட்ட ஒரு திட்டம் போடுகிறான் குமார்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!  

 

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாடகத்தில் கோமதியை கடையில் இருந்து அழைத்து வருகிறான் கதிர். நீ எதுக்கும்மா கடைக்கு எல்லாம் போற. நீ அங்க போனால் அவருக்கு பிடிக்காதும்மா என சொல்கிறான். அப்போது கோமதி பாவம்டா அவரு. எதுவுமே பேச மாட்றாரு. அவரோட நான் இருக்கனும்ல. அந்த அரசி இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லைடா. அந்த ரவுடி பயலை எப்படி இவ கல்யாணம் பண்ணான்னே தெரியலை.

அவளை அந்த குமார் டார்ச்சர் எல்லாம் பண்ண மாட்டான்ல என கேட்கிறாள் கோமதி. உடனே கதிர், அப்படி மட்டும் நடந்தால் அவனை சும்மா விட மாட்டேன். அடிச்சு கை, காலை உடைச்சு போட்டுடுவேன் என்கிறான். இதனிடையில் அரசி வீட்டில் இருக்கும் நாங்க நைட்டு வெளிய சாப்பிட போறோம் என பாட்டி, அம்மா, பெரியம்மாவிடம் சொல்கிறான் குமார். என்ன திடீரென்று வெளிய போகலாம் சொல்றான் என யோசிக்கிறாள் அரசி.

உடனே வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷமா போயிட்டு வாங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். குமார் அவளை ஏதோ ஒரு காட்டுக்குள் அழைத்து வருகிறான். உன்னை எங்க கூட்டிட்டு போறேன் தெரியுமா என கேட்கிறான். அதற்கு அவள் சாப்பிட தான போறோம் என கேட்க, உன்னை வீட்ல வைச்சு சாப்பாடு போறதே பெரிசு. இதுல ஹோட்டல்ல கூட்டிட்டு போய் சாப்பாடு போட போறேனா என கேட்கிறான். நடுக்காட்டில் வண்டியை நிப்பாட்டி அவளை வெளியில் வர சொல்கிறான்.

அரசி வர மாட்டேன் என சொல்ல, டோரை திறந்து கட்டாயமாக வெளியில் இழுக்கிறான். இங்க ஓநாய் எல்லாம் வரும். நீ இங்கயே இரு. உயிரோட இருந்தால் எங்காவது போயிடு. இல்லை செத்தாலும் எனக்கு கவலை இல்லை. உன்னை பார்க்க பார்க்க எரிச்சலா இருக்கு. என் வீட்ல நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? அசந்த நேரத்துல என் முதுகு மேல ஏறி உட்கார்ந்து என்னை டார்ச்சர் பண்றேல. இதோட உன் கதை முடியட்டும் என சொல்லி வண்டியில் ஏறி, டோரை லாக் பண்ணி விடுகிறான்.

அரசி அழுதும் அவன் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து போய் விடுகிறான். நேராக தனது நண்பர்களுடன் போய் சரக்கடிக்க ஆரம்பிக்கிறான். எல்லாரும் கல்யாணத்துக்கு ட்ரீட் கேட்க, ஒரு நல்ல விஷயம் நடக்க போகுது. நடந்து முடியட்டும் அதுக்கப்புறம் உங்க எல்லாருக்கும் பெரிய விருந்தே வைக்கிறேன் என்கிறான். இந்தப்பக்கம் அரசி அழுது கொண்டே இருட்டில் எப்படி வீட்டுக்கு போவது என தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கிறாள்.

அம்மா, அப்பாவை நினைத்து அழுகிறாள். உங்க பேச்சை கேட்டு இருந்தால் எனக்கு இப்படியெல்லாம் நடந்து இருக்குமா என புலம்புகிறாள். இந்தப்பக்கம் கதிர், செந்தில் இருவரும் வாசலில் நின்று பேசி கொண்டிருக்கின்றனர். வீட்டில் சந்தோஷமே இல்லை. ஒருத்தர் ஒருத்தர் பேசிக்கிறது கூட இல்லை என வருத்தப்படுகின்றனர். அப்போது செந்தில், நீ அரசியை எதுவும் பார்த்தியா? பேசுனியா என கேட்கிறான். இல்லண்ணே. இப்பதான் ரெண்டு குமாரோட கார்ல போனாள். அப்போதான் பார்த்தேன் என சொல்கிறான்.

அந்த சமயத்தில் குமார் காரில் வந்து இறங்குகிறான். அவன் மட்டுமே வர, அரசி எங்கே என பார்க்கிறார்கள் கதிர், செந்தில் இருவரும். குமார் அவர்களை பார்த்து லுக் விட்டு விட்டு உள்ளே போகிறான். அவன் போனதும் பாட்டி அரசி எங்கடா என கேட்கிறார். அவன் கூலாக சோபாவில் உட்கார்ந்து, அரசி எங்கன்னு என்கிட்ட கேட்குறீங்க என்கிறான். அதற்கு பாட்டி, உன் கூடத்தான வந்தாள். அப்போ உன்ட்ட தான கேப்பாங்க என்கிறான்.

உடனே அவன் என்கூட வந்தால் என்னோட வரனுமா என திமிராக கேட்கிறான். இதனால் பாட்டி அதிர்ச்சியடைந்து மாரியை அழைக்கிறாள். இந்தப்பக்கம் கதிர், செந்தில் இருவரும் அரசியை காணோம் என அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது கதிர், வா அண்ணே அரசி எங்கன்னு கேப்போம் என சொல்கிறான். அதற்கு செந்தில் கொஞ்சம் பொறுமையா இருடா. என்னன்னு பார்க்கலாம் என சொல்கிறான். ஆனால் கதிர் கேட்காமல் இல்லை அவளை அவன் ஏதோ பண்ணி இருக்கான் அண்ணே.

எனக்கு நடக்குற எதுவுமே சரியா தெரியலை. நீ வா நம்ம போய் கேட்கலாம் என கூப்பிடுகிறான். அதற்கு செந்தில் அப்படியெல்லாம் அவனால எதுவும் பண்ண முடியாதுடா என சொல்கிறான். இந்தப்பக்கம் வீட்டுக்குள் அரசியை பற்றி மாரியும் கேட்கிறாள். அம்மா, பாட்டி இரண்டு பேர் கேட்டும் அவன் ஒழுங்காக பதில் சொல்லாமல் இருக்கிறான். மறுப்பக்கம் கதிர் நீ வர்றியா, இல்லையா? நான் போறேன். அரசி எங்கன்னு கேட்க போறேன் என கொதிக்கிறான் கதிர்.

அந்த சமயத்தில் அரசி அங்கு வருகிறாள். செந்தில் அவளை பார்த்து விட்டு கதிரிடம் காண்பிக்கிறான். அரசி அண்ணன்கள் இரண்டு பேரையும் ஏக்கமாக பார்க்கிறாள். ஆனாலும் எதுவும் பேசாமல் உள்ளே போய் விடுகிறாள். அவள் வந்ததும் பாட்டி அரசி வந்துட்டா என சொல்கிறாள். இதனைக்கேட்டு குமார் கடும் அதிர்ச்சி அடைகிறான். சோபாவில் இருந்து எழுந்து அவளை பயத்துடன் பார்க்கிறான்.

அரசி வந்து என்ன பாட்டி என்னை காணோம் சொல்லி தேடுனீங்களா என கேட்கிறாள். அவளும் ஆமாம்மா. இவனோட போன. ஆனால் இவன் மட்டும் தனியா வந்தான் என சொல்கிறாள். இல்லை பாட்டி நாங்க ரெண்டும் பேரும் ஒன்னாதான் வந்தோம். வரும் போது வீட்டுக்கு முன்னாடி என் பிரெண்ட் ஒருத்தியை பார்த்தேன். ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். அதுனால கார்ல இருந்து இறங்கி போய் பேசுனேன். இவர் வீட்டுக்கு வந்துட்டாரு.

என்னங்க நீங்க எதுவும் சொல்லலையா என கேட்கிறாள். அரசி அடுத்தடுத்தது அதிர்ச்சி கொடுப்பதால் எதுவும் பேச முடியாமல் நிற்கிறான். அரசி அதோடு விடாமல், இவர் என்னை ஏதாவது பண்ணிட்டாருன்னு நினைச்சீங்களா என மாரியிடம் கேட்கிறான். குமாரின் அம்மாவும் ஆமாம் என சொல்லி விடுகிறாள். அப்படி எல்லாம் இல்லை அத்தை. என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணவரும் இவரு. என்னை ஏதாவது பண்ணிருவாரா என குமாரை பார்த்து லுக் விட்டபடி சொல்கிறாள்.

உடனே மாரியும், இவன் வாயவே திறக்கலம்மா. நீ எங்கன்னு நானும் பாட்டியும் கேட்டுட்டே இருந்தோம் என சொல்கிறாள். அதனை தொடர்ந்து மாரி, பாட்டி உள்ளே போய்விடுகிறான். அரசி அவனை பார்த்து முறைத்துக்கொண்டே உள்ளே போகிறாள். இன்னையோடு அவளை ஒழித்து கட்டி விடலாம் என நினைத்த குமார் ஏமாற்றத்துடன் வாயடைத்து நிற்கிறான்.