மாயா போட்ட சர்ச்சையான பதிவு..! கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக முடிவடைந்தது.

டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட மாயா மூன்றாம் இடம் பெற்றார். மாயா தான் டைட்டில் வின்னர் ஆவார் என அவரது டீம் பெரிதாக எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது.

இதையடுத்து மாயா ஏற்கனவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல என விரக்தியுடன் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது டிராபியை பணம் கொடுத்து கூட வாங்கலாம். ஆனால் அன்பை வாங்க முடியாது அதை நான் வாங்கி விட்டேன் என்பது போல மாயா இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்திருக்கு பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அர்ச்சனா விஜய் டிவிக்கும் பணம் கொடுத்து டைட்டில் வாங்கிட்டார் என்று சொல்கிறாரா மாயா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மாயா விரக்தியில் இப்படி எல்லாம் பதிவு செய்து வருகிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.