8 மொழிகளில் உருவாகும் பிரபாஸ் - கரீனா கபூர் திரைப்படம்..!

 

அடுத்ததாக 8 மொழிகளில் தயாராகும் படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் தேசியளவில் புகழ்பெற்ற நடிகராக மாறிவிட்டார். அதனால் தற்போது இவர் நடித்து வரும் ’ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ ஆகிய படங்கள் பான் இந்திய சினிமாவாக தயாராகி வருகின்றனர்.

சமீபத்தில் இவர் நடிக்கும் 25-வது பட அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி பட புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 8 மொழிகளில் தயாராகிறது.

இந்த படத்துக்கு ஸ்க்ரிஃப்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான டைட்டில் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கரீனா கபூர் கானை படக்குழு அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல இப்படத்தில் நடிப்பதற்கும் கரீனா கபூர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது. பாலிவுட் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த கரீனா கபூர், இதுவரை தென்னிந்திய படங்களில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.