எஸ்.பி.பி கடைசியாக பாடிய ’அண்ணாத்த’ பட பாடல்- வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவதற்கு முன்பு கடைசியாக ‘அண்ணாத்த’ படத்தில் அவர் பாடிய பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். இவர் கடைசியாக அண்ணாத்த படத்துக்கான டி. இமான் இசையில் ஒரு பாடலை பாடி இருந்தார்.

அந்த பாடலை அவர் பாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு அண்ணாத்த படக்குழு எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தியது. மேலும்  'அண்ணாத்த' படத்திற்காக எனது இசையில் எஸ்.பி.பி பாடியது ஆசிர்வாதம்' என்று டி.இமான் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக ந்த பாடத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதில் முதலாவதாக எஸ்.பி.பி பாடியுள்ள பாடல் அக்டோபர் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தில் ரஜினிக்கான ஓபனிங் பாடலாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.