விக்ரம் - கவுதம் மேனன் படத்துக்கு ஏற்பட்ட நிலைமை..!

 

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் மீக நீளமாக இருப்பதால் பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு துவக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. அப்போதே படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுவிட்டது. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சிம்ரன், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும் ராதிகா, திவ்யாதர்ஷினி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் விநாயக் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 80 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்ட துருவ நட்சத்திரம் படம் இன்னும் வெளியாகவில்லை. பட்ஜெட் பிரச்னை, கொரோனா சூழல் என பல்வேறு பிரச்னைகளை கடந்து விரைவில் படத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தற்போதுள்ள காட்சிகளை வைத்து படத்தின் நீளத்தை ஆராய்ந்து பார்த்ததில் சுமார் நான்கரை மணி நேரத்தை கடந்துள்ளது. இதனால் பாகுபலி போன்று படத்தை இரண்டு பாகங்களாக மாற்றி படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.