அப்போ பொய் சொன்னது சரி..! அதை இப்ப ஏன் சொல்லணும்..? சராமாரி கேள்வி..!!

 

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தின் ஒருவன்’ படம் குறித்து மறைக்கப்பட்ட வரலாறு என்று இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ள தகவல் குறித்து இணையதளங்களில் காரசார விவாதம் நடந்து வருகிறது.

தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென், அபிநயா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.