தெலுங்கு த்ரிஷயம்- 2 முடிவுக்கு வந்தது: தீயாக வேலை செய்யும் ஜீத்து ஜோசப்..!

 

மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷயம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக டாலிவுட் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் மோகன்லால், மீனா நடிப்பில் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்யப்பட்ட த்ரிஷ்யம் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருந்த இந்த படம் உடனடியாக தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

தெலுங்கு த்ரிஷயம் முதல் பாகத்தில் நடித்திருந்த அனைவரும் இப்புதிய படத்திலும் இணைந்தார்கள். அதன்படி முதன்மை கதாபாத்திரத்தில் வெங்கடேஷ், மீனா ஆகியோருடன் நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. வெறும் 45 நாட்களில் இந்த படத்தை முடித்துவிட ஜீத்து ஜோசப் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே படம் முடிக்கப்படவுள்ளது.

எனினும் இந்த படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான ‘அசுரன்’ படம்  தெலுங்கில் ’நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.