இன்று மீண்டும் ரீ-ரிலீஸாகும் தளபதி திரைப்படம்..!  

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஜெய்பூர் சென்றிருக்கிறார் ரஜினி. பிறந்தநாள் அன்று அவர் சென்னைக்கு திரும்பி வந்துவிடுவார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். பட வேலை இருந்தால் பிறந்தநாள் அன்று ஷூட்டிங்கிலேயே இருந்துவிடுவது ரஜினியின் வழக்கம் ஆகும்.


எனவே, டிசம்பர் 12ம் தேதி அவர் கூலி படப்பிடிப்பில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பெரும்பாலும் பிறந்தநாள் அன்று எங்காவது சென்று தனியாக இருக்க விரும்புவார் ரஜினிகாந்த். இதை அவரே தெரிவித்திருக்கிறார்.

அப்படி தனிமையில் இருக்கும்போது எல்லாம் அவர் தன்னிடம் இரண்டு கேள்விகளை கேட்கிறார். நான் ஏன் இந்த பிறவியை எடுத்தேன், என்ன செஞ்சுக்கிட்டு இருக்கேன் என்பது தான் அந்த இரண்டு கேள்விகள் ஆகும். தன்னிடமே இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் ஒரு நாள் நிச்சயம் பதில் கிடைக்கும் என்பது ரஜினியின் நம்பிக்கை ஆகும்.

ரஜினியின் 74வது பிறந்தநாள் அன்று தளபதி படம் மீண்டும் ரிலீஸாகவிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்த அந்த படம் மீண்டும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் 34 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களின் கோரிக்கை நிறைவேறப் போகிறது என தகவல் கிடைத்திருக்கிறது.


டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பை துவங்குகிறார்களாம். ரஜினியின் கெரியரில் மீண்டும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இது அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.