டார்ச்சர் செய்யும் கணவன்... அப்பாவிடம் புலம்பும் இனியா... அதிர்ச்சியில் கோபி..!
இன்றைய சீரியலில் வீட்டில் நடக்கும் விஷயங்களால் குழப்பத்தில் இருக்கும் இனியா, அம்மாவிடம் இதுப்பற்றி பேசலாமா என நினைத்து பாக்யாவின் ஹோட்டலுக்கு போகிறாள். அங்கு போனதுமே இந்த வெயில்ல என்ன இனியா வந்து இருக்கு. வா சாப்பிடலாம் என பேசி கொண்டே இருக்கிறாள் பாக்யா. ஆனால் அவள் எதுவும் பேசாமல் டல்லாக இருக்கிறாள். இதனால் பாக்யா என்னாச்சு என கேட்கிறாள்.
அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லும் இனியா, ஒருக்கட்டத்தில் அழுக ஆரம்பிக்கிறாள். இதனால் பாக்யா பதறிப்போய் என்னாச்சு இனியா? ஏதாவது பிரச்சனையா என கேட்கிறாள். ஆனால் இனியா, உன்னை நினைக்கும் போது கவலையா இருக்கும்மா என சொல்லி சமாளிக்கிறாள். இதனையடுத்து பாக்யா, ரெண்டு ரெஸ்டாரண்ட் போனா என்ன இனியா. அதான் இப்போ ஹோட்டல் வைச்சு இருக்கேன்ல. கடையும் நல்லா போகுது. இதுக்கு மேல என்ன கவலை.
அதுவும் இல்லாம ஒரு வயசுக்கு மேல நம்ம மத்தவங்க சந்தோஷத்தை பத்தி தான் யோசிக்க ஆரம்பிப்போம். அப்படித்தான் என் பசங்க சந்தோசம் தான் எனக்கு முக்கியம். எழில், செழியன் ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க. நீயும் சந்தோஷமா வாழ்ந்தால் எனக்கு போதும் என்கிறாள். நீ சாப்பிடு. உனக்காக நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் என சொல்லி உள்ளே போகிறாள் பாக்கியலட்சுமி. அப்போது செல்வி, உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் இன்னும் பாக்யா அக்கா குழந்தை மாதிரி தான் பார்க்குது பாப்பா என்கிறாள்.
இதனால் இனியா சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் போகிறாள். இதனையடுத்து அவள் வீட்டுக்கு எங்க போயிட்டு வர்ற என எல்லார் முன்னாடியும் கேட்கிறான் நிதிஷ். அம்மாவை பார்க்க ஹோட்டல் போய்ட்டு வந்ததாக சொல்கிறாள். உடனே அவன் அம்மாவை பார்க்க போனியா. இல்லை அந்த நிதிஷை பார்க்க போனியா. அம்மா ஹோட்டல்ல வைச்சு உன் எக்ஸை பார்க்குற. உன்னை கொண்டு வந்து இங்க உன் அப்பா விடுறாரு. என்ன குடும்பம் என தரக்குறைவாக பேசுகிறான்.
இதனையடுத்து இனியா எதுவும் பேசாமல் உள்ளே போய் விடுகிறாள். அதன்பின்னர் நிதிஷ் ரூமுக்கு வந்ததும், அவனிடம் நான் நம்மளோட ரிலேஷன்ஷிப்ல உண்மையா தான் இருக்கேன். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை என சொல்கிறாள். அவன் அதையெல்லாம் கேட்டுவிட்டு எதுவுமே பதில் சொல்லாமல் போகிறான். உடனே கோபிக்கு போன் செய்து நாளைக்கு உங்ககிட்ட பேசனும் அப்பா என்கிறாள் இனியா. நைட் போன் பண்ணி மகள் இந்த மாதிரி பேசியதால் பதட்டத்தில் இருக்கிறான் கோபி.
இதனையடுத்து மறுநாள் காலையில் விடிந்ததுமே இனியாவை வந்து மீட் பண்ணுகிறான் கோபி. இருவரும் தனியாக காரில் போகும் போது என்னம்மா பிரச்சனை என கேட்கிறான். அப்போது இனியா எதுக்காக டாடி எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சீங்க. ஆகாஷ் விஷயம் பத்தி நிதிஷுக்கு தெரிஞ்சு இருக்கு. மொத்த குடும்பமும் என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்க என நடந்த எல்லாத்தையும் சொல்கிறாள் இனியா. இதனைக்கேட்டு கடுமையாக அதிர்ச்சி அடைகிறான் கோபி.
நான் இந்த விஷயத்தை அம்மாக்கிட்ட சொல்லலாம் தான் இருந்தேன். ஆனால் அவுங்க ஏற்கனவே பல பிரச்சனைல இருக்காங்க. அதுனால தான் நான் அம்மாட்ட சொல்லலை. இப்படியே இருந்தால் எனக்கு என்னமோ ஆகிரும் போல என்கிறாள். இதனால் பதட்டமடையும் கோபி, இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் என சொல்லி இனியாவை சமாதானம் செய்கிறான் கோபி.