இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் இந்த நடிகரா கூட இருக்கலாம்..! 

 

சினிமா துறையில் பல ஆண்டுகளாக இருந்தும் ஒரு பெயரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தவர் தான் நடிகர் மாரிமுத்து,ஒருவழியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுத்தது.

அந்த சந்தோஷத்தில் மாரிமுத்து தனது கனவு வீடு வாங்கி அதை அழகாக கட்டி வந்துள்ளார் விரைவில் குடிபோகவும் முடிவு செய்திருக்கிறார். ஆனால் அதற்குள் மாரிமுத்து இறந்துவிட்டார். மாரிமுத்து மறைவு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது 

இப்போது அவர் இறந்ததில் இருந்து ஆதி குணசேகரனாக இனி நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அதிகம் வலம் வருகிறது…சீரியல் குழுவினர் நடிகர் வேல ராம மூர்த்தியிடம் கேட்டுள்ளனர் அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.

எனவே சீரியல் குழு இப்போது புதியதாக நடிகர் பசுபதி மற்றும் ராதா ரவி இருவரிடமும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்து கேட்டுள்ளார்களாம்…அப்படி இவர்கள் உடனே ஒகே சொல்லுவார்களா என்பதை பற்றி ரசிகர்கள் கருத்துக்கள் சொல்லி வருகின்றனர்.