லண்டனுக்கு பறந்தார் வைகை புயல் வடிவேலு..!! 
 

 

சமீபத்தில் டைரக்டர் ஷங்கர் வடிவேலுவுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் ரெக்கார்டு நீக்கப்பட்டது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

முதலில் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைக்கப் படக்குழு முடிவு செய்தது. ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டதால், பின்னர் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பு வைத்தது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் சில முக்கியக் காட்சிகளையும், ஒரு பாடலையும் படமாக்க ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு லண்டன் சென்றுள்ளது. அடுத்த சில வாரங்கள் லண்டனில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.