கொல்கத்தாவில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட வனிதா..?

 

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் புதியதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுதொடர்பாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானதை தொடர்ந்து, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

முன்னதாக பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமனம் செய்துகொண்டார் வனிதா. ஆனால் அவர் குடிகாரர் என்று கூறி அந்த உறவை முறித்துக்கொண்டார். இதையடுத்து அவர் மீது பீட்டர் பாலின் முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். எனினும், தொடர்ந்து சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.