விஜயின் கல்வி விழாவை கடுமையாக விமர்சித்த வேல்முருகன்.! பதிலடி கொடுத்த வலைப்பேச்சு அந்தணன்!
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சி குறித்து பேசிய ஒரு பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேச்சில், விஜய் வழங்கிய வைர நெக்லஸ்கள், மாணவ-மாணவிகளின் நெருக்கம், புகைப்படங்கள் எடுத்தது போன்ற விடயங்களை மிகுந்த அருவருப்பான மற்றும் தவறான பார்வையில் விமர்சித்துள்ளார் வேல் முருகன்.
இது குறித்து பலரும் "அப்பா-மகள், அண்ணன்-தங்கை உணர்வுதான் அந்த மேடையில் காணப்பட்டது" என்றும், “வேல்முருகனின் பார்வைதான் கொச்சையானது” என்றும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வேல்முருகனின் விமர்சனம் குறித்து அந்தணன், “ஒரு நடிகன் இது மூலம் அரசியலுக்கு வரலாம்… மக்களிடம் செல்வாக்கு பெறலாம்… ஆனால் அவன் கொடுக்கும் உதவியின் பலன் யாருக்கு? ஏழை மாணவனுக்கு அல்லவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இவ்வாறு பரிசு கொடுப்பதனை தவறாக பார்ப்பது உண்மையிலேயே தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.