விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் வரிசையாக நிறைவடைந்து நிற்கும் நிலையில், கோடியில் ஒருவன் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் மற்ற நடிகர்களைக் காட்டிலும் ஹிட் படங்களை கொடுப்பதில் தனித்து இருக்கிறார். இதனால் விஜய் ஆண்டனி படங்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது. மெட்ரோ, மீசைய முறுக்கு ஆகிய படங்களில் நடித்த ஆத்மிகா இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அரசியல் த்ரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாவது குறிப்பிடத்தக்கது.