இனியா ஆகாஷ் பேசும் போது... திடீரென என்ட்ரி கொடுத்த நிதிஷ்..! அதிர்ச்சியில் இனியா..!
இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் மகள் சொன்னதை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த கோபி நேராக சுதாகர் வீட்டுக்கு கிளம்பி போகிறான். அங்கு அவனை சந்தித்து பாக்யாவை கடையை அடைக்க சொன்னீங்களாமே என கேட்கிறான். இதனைக்கேட்டு ஷாக்காகும் சுதாகர், சம்பந்தி அம்மாக்கிட்ட தான் இனியாவை பேச சொன்னேன். உங்ககிட்ட பேசிட்டாளா? நம்மோட ஸ்டேட்டஸ்க்கு இந்த மாதிரி சின்ன கடை எல்லாம் வேணுமா? எல்லாரும் என்கிட்ட கேள்வி கேட்குறாங்க என்கிறான்.
அதற்கு கோபி பாக்யா ரெண்டு பெரிய ரெஸ்டாரண்ட் வைச்சு நல்லபடியா தான் இருந்தாள். அவளோட இரண்டு ரெஸ்டாரண்ட்டையும் நீங்கதான் வாங்கி இருக்கீங்க. இன்னைக்கு தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு. அதைப்பத்தி நான் பேச விரும்பலை. அவளோட இந்த நிலைமைக்கு நானும் காரணம்ன்னு குற்றவுணர்ச்சி இருக்கு என்கிறான். இதனால் அதிர்ச்சியடையும் சுதாகர், சமாளிக்க பார்க்கிறான். ஆனால் கோபி பழசை பத்தி பேச வேண்டாம் என சொல்லிவிடுகிறான்.
பாக்யா இப்போ துவங்கி இருக்க ஹோட்டலை மூட சொல்ல முடியாது என உறுதியாக சொல்லிவிடுகிறான் கோபி. சுதாகர் சரி சம்பந்தி. நம்ம ஸ்டேட்டஸ்க்கு இந்த ஹோட்டல் வேண்டாம் நினைச்சேன். உங்களோட விருப்பம் என்கிறான். அதன்பின்னர் இனியாவின் வேலை பற்றி பேச, எங்க வீட்டு மருமகள் பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போறது சரியாய் இருக்காது சம்பந்தி. நீங்க கேட்ட ஒரு விஷயத்துக்கு ஓகே சொன்னேன். இந்த விஷயத்தை விட்டுடுங்க.
இனியா வேலைக்கு போறது இந்த குடும்பத்துக்கும் நல்லது இல்லை. இனியாவோட வாழ்க்கைக்கும் நல்லது இல்லை என மிரட்டுவதை போன்று பேசுகிறான். இதனையடுத்து ஒரு மீட்டிங் இருக்கு சம்பந்தி என சொல்லிவிட்டு போய் விடுகிறான் சுதாகர். இதனையடுத்து பாக்யா ஹோட்டலில் இருக்கும் போது கவுன்சிலர் தனது ஆட்களுடன் வருகிறான். அவன் கடைக்குள் நுழைவதற்கு முன்பாகவே, போனை எடுத்து மினிஸ்டர் சார் உதவியாளரா? என்கிட்ட அமைச்சர் பேசனும் சொல்றாரு. சொல்லுங்க சார்.
என் பையன் வெளிய வந்துட்டான் சார். ரொம்ப நன்றி. கவுன்சிலர் எதுவும் பிரச்சனை பண்ணா உங்கக்கிட்ட சொல்லவா சார் என பேசுகிறாள் பாக்யா. இதனைக்கேட்டு கவுன்சிலர் அங்கிருந்து ஓடி விடுகிறான். அதன்பின்னர் செல்வியிடம் வராத போனை வைச்சு கவுன்சிலரை அனுப்பி வைச்சுட்டேன் பாரு என்கிறாள் பாக்யா. அதன்பின்னர் இனியா ஹோட்டலுக்கு வருகிறாள். அவள் இருக்கும் போது ஆகாஷ் அங்கு வருகிறான். அவனிடம் படிப்பு எல்லாம் எப்படி போகுது என கேட்கிறாள்.
இந்த சமயத்தில் இனியாவை கூப்பிட நிதிஷ் அங்கு வருகிறான். ஆகாஷை பார்த்துக்கொண்டு அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போகிறான். அதன்பின்னர் ரூமில் வைத்து என்ன இனியா தினமும் அம்மாவை பார்க்க ஹோட்டல் போற. கல்யாணத்துக்கு போற மாதிரில ரெடி ஆகியிருக்க என்கிறான். அதோட அங்கு ஒரு பையன் இருந்தான்ல, அவன் யாரு என கேட்கிறான். அதற்கு செல்வி ஆண்ட்டி பையன் என்கிறாள் இனியா.
உடனே நிதிஷ், அவ்வளவு தானா. உனக்கும் அந்த பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா என கேட்கிறான். இதனால் இனியா அமைதியாக நிற்க, அவன் உன்னோட எக்ஸ் தான என கேட்கிறாள். இதனைக்கேட்டு இனியா அதிர்ச்சியில் உறைவதுடன் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.