பால்கியுடன் கைக்கோர்க்கும் துல்கர் சல்மான்- ஒளிப்பதிவு யார் தெரியுமா..?

 

இந்தியில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் மூன்றாவது படத்தை பால்கி இயக்கியுள்ளதை அடுத்து, அந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழிலும் முக்கியமான நடிகராக உள்ளார். அவர் தமிழில் நேரடியாக வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, சோலோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என நான்கு படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக அவர் தமிழில் நடிக்கும் படம் ஹே சினாமிகா. இதை நடன இயக்குநர் பிருந்தா இயக்கி வருகிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கி கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இதற்கிடையில் மூன்று மலையாளப் படங்களில் நடித்து வரும் துல்கர் ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார்.

இவர் இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து பா, சீனிகம் போன்ற வித்தியாசமான படங்களை அளித்தவர். மேலும் அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தையும் இவர் தான் இயக்கி இருந்தார். துல்கர் சல்மானை வைத்து பால்கி இயக்கும் படம் சைக்காலஜி த்ரில்லர் கதையமைப்பில் உருவாகவுள்ளது.

முன்னதாக பால்கி இயக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பி.சி. ஸ்ரீராம் தான். அதனால் இந்த படத்திற்கும் அவர் தான் ஒளிப்பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக பால்கியுடன் சேர்ந்து விவாதிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.