நாளை ஓடிடியில் அமரன் படம் வெளியாவதில் சிக்கல்..!
சென்னையைச் சேர்ந்த வாகீசன் என்ற என்ஜினியரிங் மாணவர் அமரன் படத்தில் தனது அனுமதியின்றி தன் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டதனால், மன உளைச்சலுக்கு ஆளானேன் என சில நாட்களுக்கு முன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் .
இந்நிலையில் வாகீசனின் வக்கீலின் மூலம் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், அமரன் படத்தில் இழந்த தனிமனித உரிமையினால் அவர் அவமானம் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாக கூறியுள்ளார். இதன் விளைவாக அவர் பெரிய அளவில் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், இழப்பீடாக ரூ.1.10 கோடி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமரன் படம் நாளை ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
படத்தின் தயாரிப்பு குழு இதுகுறித்து இன்னும் பதில் அளிக்கவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதிரான இந்நடவடிக்கை படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், மன்றத்தின் முடிவு என்னவாகும் என்பதற்கு அனைத்து தரப்பும் ஆர்வமாக காத்திருக்கின்றன.