சந்தேகத்தால் காதலியை தம்பியுடன் சேர்ந்து கொன்று புதைத்த காதலன்..!

 

ஆண் நண்பர்களுடன் பேசிவதாக சந்தேகப்பட்டு காதலியை தம்பியுடன் சேர்ந்து கொலை செய்து கொன்று புதைத்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜஸ்ரீ என்கிற கல்லூரி மாணவி, பொறையூரைச் சேர்ந்த பிரதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசுவதாக சந்தேகப்பட்ட பிரதீஷ் காதலியை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் ராஜஸ்ரீ தொடர்ந்து தனது நண்பர்களுடன் நட்புடன் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் ராஜஸ்ரீயை தனியாக பொறையூர் சுடுகாட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு தனது தம்பியுடன் சேர்ந்து அவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வைத்துவிட்டு அங்கியிருந்து சென்றுவிட்டார்.

சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராஜஸ்ரீயின் உடலை கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, காதலன் பிரதீஷ் காதலியை கொலை செய்த விபரம் தெரியவந்தது.

அதையடுத்து அவரை கைது செய்த புதுச்சேரி காவல்துறை தலைமறைவாகியுள்ள அவருடைய தம்பியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.