நீ மட்டும் இப்படி அம்மா பிள்ளையா இருக்கா. இதுக்கு நீ கல்யாணம் பண்ணிக்காமலே இருந்து இருக்கலாம் - மனோஜை வெளுத்து வாங்கிய ரோகிணி..!

 
1

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் முத்துவிடம் நாளைக்கு உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கா. சீதா நம்மளை கோயிலுக்கு வர சொல்லி இருக்கா. உங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாம விட்டுட்டேன். சீதா ஒரு பையனை லவ் பண்றாள் என சொல்கிறாள். இதனைக்கேட்டு ஆச்சரியப்படுகிறான் முத்து. நம்ம சீதாவா லவ் பண்றா என கேட்கிறான். ஆமாங்க. இந் விஷயம் யாருக்கு தெரியும். அம்மாக்கிட்ட கூட சொல்லலை.

என்கிட்ட தான் சொல்லி இருக்கா. நம்ம நாளைக்கு போய் பார்த்துட்டு வரலாம் என சொல்கிறாள். முத்துவும் சீதா எப்படியும் நல்ல பையனை தான் பார்த்து இருப்பா. நம்மளும் போய் பார்த்துட்டு மத்த விஷயத்தை எல்லாம் பேசிக்கலாம் என சந்தோஷமாக சொல்கிறான். இதனிடையில் மனோஜ் ரூமில் இருக்கும் போது, அவனிடம் இன்னும் நான் என்ன பண்ணனும். ஆண்ட்டிக்காக கடன் வாங்கி நகை வாங்கிட்டு வந்தேன். ஆனால் இன்னும் என்மேல கோபமா இருக்காங்க என சொல்கிறாள்.

அதற்கு மனோஜ் அம்மா உன்மேல பாசமா தான் இருந்தாங்க. இந்த வீட்ல மத்த மருமகள்களை விட உன்னை ரொம்ப மரியாதையா தான் நடத்துனாங்க. பாசமா தான் இருந்தாங்க. நீ பொய் சொன்னதை அம்மாவால ஏத்துக்க முடியலை என சொல்கிறாள். உடனே ரோகிணி, இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டு இருக்க போறாங்க. உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் சொல்லித்தானே பொய் சொன்னேன். அத்தை மனசு மாறுறதுக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியா மாறிடுவேன் போல என சொல்கிறாள்.

அதற்கு மனோஜ் நீ பொறுமையா இரு. இப்போ உன் நகையை அம்மா வாங்கி இருக்கிறதே அவுங்க மனசு இறங்கி வந்ததுக்கு ஒரு உதாரணம். போக போக மாறிடுவாங்க என சொல்ல, எனக்காக நீ பேசவே மாட்டியா என கேட்கிறாள். உடனே மனோஜ் இப்போ நான் உனக்காக போய் பேசுனேனா, நம்ம ரெண்டு பேரை மொத்தமா பேச விடாம பண்ணிப்பாங்க என சொல்கிறான். இதனால் ரோகிணி கடுப்பாகி, இந்த வீட்ல எல்லாரும் அவுங்க மனைவிக்காக பேசுறாங்க.

நீ மட்டும் இப்படி அம்மா பிள்ளையா இருக்கா. இதுக்கு நீ என்னை கல்யாணம் பண்ணிக்காமலே இருந்து இருக்கலாம். உன் அம்மா பிள்ளையாவே இருந்திருக்கலாம் என கடும் கோபத்துடன் சொல்கிறாள். இந்தப்பக்கம் ரவியிடம் நீ இன்னும் வேலையை விடலையா என கேட்கிறாள் ஸ்ருதி. அதற்கு அவன் உடனே எல்லாம் வேலையை விட முடியாது என உறுதியாக கூறுகிறான். அதற்கு ஸ்ருதி, நான் என் வீட்ல பணம் வாங்கி ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணுறேன்.

நம்ம ரெண்டு பேரும் பார்த்துக்கலாம் என சொல்கிறாள். அப்போது ரவி வேண்டாம் என்கிறான். உன் அம்மா, அப்பா பணம் உனக்கு சேர வேண்டியது. அவுங்ககிட்ட வாங்கி நான் என் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண மாட்டேன் என்கிறான். இதனையடுத்து ஸ்ருதி, நான் என் சேவிங்க்ஸ்ல ரெஸ்டாரண்ட் ஓபன் பண்றேன். நீ செஃப்பா இருக்கியா என கேட்க, மொத நீ ஓபன் பண்ணு. அப்பறம் பார்க்கலாம் என சொல்லிவிடுகிறான்.

இதனையடுத்து மறுநாள் முத்து, மீனா இருவரும் கோயிலுக்கு கிளம்புகின்றனர். மற்றொரு பக்கம் அவர்களுக்கு முன்பாக அருண், சீதா இரண்டு பேரும் வந்து விடுகின்றனர். தனது மாமாவை பற்றி ஆஹா, ஓஹோவென பேசி கொண்டிருக்கிறாள் சீதா. முத்துவும் மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும் எனக்கேட்டு ஸ்வீட், பழங்கள் எல்லாம் வாங்கி கொண்டு ஆர்வமாக வருகிறான். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web