முதல் ஆளாக வந்து உதவிய நடிகர் சிவகார்த்திகேயன்..! 

 
1

சிவகார்த்திகேயன், புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்த உதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, சிவகார்த்திகேயன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை பாராட்டினார். அவர் கூறியதாவது, "இந்நேரத்தில் நம்மிடம் இயன்ற அனைத்தையும் நிவாரணத்திற்காக செய்ய வேண்டும். இது கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்" என்றார்.

சிவகார்த்திகேயனின் இந்த செயல் ரசிகர்களிடமும் சமூகத்திலும் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அவரது உதவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல், கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கினார். அதற்கான காசோலையை இன்று தன்னிடம் வழங்கியதாகவும், அவருக்கு என் அன்பும், நன்றியும் என்றும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 


 

From Around the web