ஒரே படத்திற்கு 115 சர்வதேச விருதுகள்..!! நடிகர் பார்த்திபன் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் தான் இரவின் நிழல். இந்த திரைப்படத்தை ஒரு சாதனை முயற்சியாக அவர் ஒரே ஷாட்டில் படமாக்கி இருந்தார்.
சமூகத்தில் ஒருவனின் பசி மற்றும் பசி சார்ந்த பிரச்சனை மற்றும் அவனின் கருப்பு பக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை நடிகர் பார்த்திபன் எடுத்திருந்தார். மேலும் எந்த சூழலிலும் பாவம் செய்யக்கூடாது என்றும், அப்படி செய்தால் என்ன ஆகும் என்றும் மெசேஜ் கொடுத்திருந்தார்.
நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், சுமார் 50 வயது மதிக்கத்தக்க மனிதனின் பல்வேறு வயது காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக படத்தை எடுத்து இருந்தனர்.
94 நிமிடம் 36 நொடிகள் நீளம் கொண்ட இந்த படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்படுவதால் நடிகர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு தற்போது வரை 115 சர்வதேச திரைப்பட விருதுகள் கிடைத்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்றபோது பேசிய பார்த்திபன், “இரவின் நிழல் படத்திற்கு இதுவரை 115 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. அதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு கோவிலின் மகிமை என்பது அதன் உள்ளே சென்று பார்த்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதுபோல ஒரு விருது எந்த அளவிற்கு உயர்ந்தது என்பதை அதை வாங்கியவர்களால் மட்டுமே உணர முடியும். 20 ஆண்டுகள் கழித்து கூகுள் செய்து பார்க்கும்போது கூட இரவின் நிழல் படம் அந்த இடத்தில் இருக்கும்.” என்று தெரிவித்தார்.