'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு..!!
கடந்த 2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தை கதிரேசன் தயாரித்திருந்தார். நாளைய இயக்குனர் போட்டியின் மூலம் பிரபலமான கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்தின் மூலம் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டார். ஜிகர்தண்டா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று தடம் பதித்தார். சிறந்த துணை நடிகர் மற்றும் படத்தொகுப்பிற்காக இந்தப் படத்திற்கு இரு தேசிய விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில் 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#8yearsofJigarthanda
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022
And..... pic.twitter.com/pKL2Qi4oks
#8yearsofJigarthanda
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022
And..... pic.twitter.com/pKL2Qi4oks